Wednesday, May 13, 2015

இறைவனடி பணிந்தால்



இறைவனடி பணிந்தால் இறைவன் திருமுடி நம்மை நோக்கி வந்து விடும்! பணிந்தவர்க்கே பரமனருள்! பணிவுகனிவு அன்பு பண்புதான் இறையருள் கூட்டுவிக்கும்! அத்தகைய திருவடி எப்படி பட்டது என பல நூறு வார்த்தைகளால் வர்ணிக்கிறார் வள்ளல் பெருமான்!
தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம்
தரும்இணை மலர்ப் பூம்பதம்
சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய
சாட்சியாகிய பூம்பதம்
தணிவிலா அணுபக்ஷ சம்பு பக்ஷங்களில்
சமரசமுறும் பூம்பதம்
தருபரம் சூக்குமம் தூலம் இவைநிலவிய
தமக்குள் உயிராம் பூம்பதம்
தவாத சாந்தப்பதம்சாந்தமே அமைதியே உருவான இரு கண்மணியின் உள்ளே திருவடி! துவாத சாந்தப்பதம் நம் சிர நடுவில் உச்சியில் விளங்கும் ஒளிநிலை! அனுபவத்தில் அறியும் ஸ்தானம்! தரும்இணை மலர்ப் பூம்பதம் இருகண்மணி உள் நடு , சிர நடு உச்சி ஆக இருபதத்திற்க்கும்நம்மை அழைத்து செல்லும் இணையான இரண்டு தாமரை மலர்  போன்ற பதமான இரு கண்மணிகள்.
சகலர் - மும்மலம் உள்ள சராசரி மனிதர்! பிரளயாகலர் - இரு மலம்உள்ளவர்! விஞ்ஞானகலர் - ஒரு மலம் உள்ளவர்
சாதனை செய்து வர வர மும்மலங்கள் ஒவ்வொன்றாக போய்விடும். மலமற்ற நிலையே இறைநிலை! இதய சாட்சியாக பூம்பதம் இதய சாட்சியாக நம் மனசாட்சியாக இறைவனே உள்ளிருந்து நம்மை பார்த்து கொண்டிருக்கிறார். அப்படி சாட்சியாக இறைவன் இருப்பது பூப்போன்ற திருவடி கண்மலர்.
தணிவிலா அணுபக்ஷ சம்பு பக்ஷங்களில்குறைவில்லாத நிலையில் அணு நிலையம், தானே உருவையும் துலங்குகின்றது. பூம்பதங்களில்! சமரசமுறும் பூம்பதம் எல்லா அணுவிற்க்கும் அனுவாகவவும், எல்லாவற்றிலும் தானேயாயும் சமமாக இலங்கும் பூம்பதம். மலர்ப்பாதம் திருவடிகண்மணி!
தருபரம் சூக்குமம் தூலம்தற்பரம் + சூக்குமம் + தூலம் மூவகை நிலை நம் உடல்! இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்பதம். இம்மூன்று நிலையிலும் உயிராகிய பதம் நம் திருவடி! பரமான மேலான தெய்வம் பராபரமாக நம் நடுவில் கண்மணி நடுவில் சிர நடுவில் உள்ளில் ஒளியாக துலங்குகிறது!
இந்த ஒரு தவம் போதும் எல்லாருக்கும் வழி காட்டும் என சொல்லும் வள்ளல் பெருமானின் அற்புதமான பாடல்!
என் அறிவெனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய்
இருந்த செங்கமலப் பதம்
என் அன்பெனும் பதம் என் அன்பிற்க்கு வித்தாய்
இசைந்த கோகனகப் பதம்
என் தவமெனும் பதம் என் மெய்த்தவப் பயனாய்
இயைந்த செஞ் சலசப்பதம்
என் இரு கண்மணியானபதம் என் கண்மணிகளுக்கு
இனிய நல்விருந்தாம் பதம்
பட்டினத்தாரும் இதே போல இறைவனை சோதி என்றே குறிப்பிடுகிறார். இறைவன் பிரபஞ்சமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சோதியானவன். இப்படியான சோதியை சரியாக புரிந்து சிந்தையில் வைக்காதவர்கள் மூடர்கள் என்று சொல்கிறார் பட்டினத்தார்.

"எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டித்ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம் கட்டிச்சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பார். கருத்தில்வையார் பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே".


No comments:

Post a Comment