Thursday, May 14, 2015

பற்றை அகற்றினால் மட்டுமே இறைவனை அடையலாம் !!!



பற்றை அகற்றினால் மட்டுமே இறைவனை அடையலாம் !!!



 

ஓளவையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் ஓளவைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்

ஒரு முறை ஓளவை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, ஓளவை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார்

களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, “என்ன பாட்டி. மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பைப் போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?” என்றான்

சந்ததோஷப்பட்ட ஓளவைவேண்டும்என்றார். உடனே முருகன்,”பாட்டி. தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த ஓளவை ஏதும் புரியாமல்,”சுட்ட பழத்தையே கொடேன்என்றார்.
சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. ஓளவை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,”பாட்டி. பழம் மிகவும் சுடுகின்றதா? ஆறியவுடன் சாப்பிடுங்கள் என்று கூறி சிரித்தான்.

சிறுவனின் மதிநுட்பத்தை அறிந்த பாட்டி, மரத்தில் இருப்பவன் மானிடச் சிறுவனல்ல என்பதைப் புரிந்து கொண்டார். பின்னர் முருகன் தன் சுயவடிவில் அவருக்கு அருள்பாலித்து முக்தி தந்தார்

முருகன் இந்த திருவிளையாடலால் உலகிற்கு ஒரு தத்துவத்தை உணர்த்தினார். அதாவது,
உயிர்களின் மீதுஉலகப்பற்றுஎன்னும் மணல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை அறியும் மெய்யறிவும் தேவை. பற்றை அகற்றினால் இறைவனை உணரலாம்என்பதே அது.

 இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம். முருகன் மாமனையும், மருகனையும் ஒருசேரப் பார்க்கக்கூடிய தலம்தான் பழமுதிர்சோலையாகிய அழகர்மலை. வள்ளியை மணமுடிக்க முருகன் இத்தலத்தில் முதியவர் வேடம் கொண்டு, தன் சகோதரரான விநாயகரிடம் உதவி கேட்க, விநாயகர் யானை வேடம் கொண்டு வள்ளியை துரத்த, முதியவர் வேடம் கொண்ட முருகன் வள்ளியை கரம்பிடித்த தலம் இத்தலம் ஆகும்.

                      குருவே சரணம் சரணம்

No comments:

Post a Comment