Wednesday, May 13, 2015

துறவால் நீர் கண்ட பயன் என்ன...??



துறவால் நீர் கண்ட பயன் என்ன...??

பெருஞ்செல்வந்தராக இருந்த பட்டினத்தார் திடீரென்று ஒரு நாள் எல்லாவற்றையும் துறந்து துறவியாகி விட்டார். 

அதை கேள்விப்பட்ட அரசன் தன் சுற்றம் சூழ ஆரவாரமாக அவரை காண வந்தான். பட்டினத்தார் ஓரிடத்தில் வெறுங்கோவணத்துடன் ஆண்டிக்கோலத்தில் அமர்ந்திருந்தார். 

அரசன் அவரை வணங்கி, எமக்கு இணையாக செல்வம் படைந்திருந்த நீர், எல்லாவற்றையும் துறந்து விட்டீர். இதனால் நீர் கண்ட பயன் என்ன? என்று அலட்சியமாக கேட்டான். 

அவை எல்லாம் இருந்திருந்தால் நான் உம்முன் நின்றிருப்பேன்.          துறந்ததால் இப்போது என் முன் நீர் நிற்கிறீர்கள்.           .இந்த சிறப்பு ஒன்று போதாதா.. ! 

என்று அமைதியாக பதிலளித்தார் பட்டினத்தார் 
.

No comments:

Post a Comment