Saturday, May 16, 2015

நிலையாமை பற்றி திருமூலர் விளக்கம் :-



 

திருமூலர் முதலாம் தந்திரத்தில் நிலையாமை பற்றி மிக அழகாக கூறியுள்ளார்.
 
 


யாக்கை நிலைக்காது 
செல்வம் நிலைக்காது 
இளைமை நிலைக்காது

 
உடலில் உயிர் நிலைக்காது எனவே இறைவனை அடையும் வழியைத் தேட வேண்டும் . நம்முடன் கூடவருவது பாவ புண்ணியமே. 

யாக்கை நிலையாமை பற்றி பின்வரும் பாடல் 

மண் ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் 
திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது 
விண்ணின்று நீர்விழின் மீண்டும் மண் ஆனாற்போல் 
எண்இன்றி மாந்தர் இருக்கின்ற வாறே. 


கூட வருவது பாவ புண்ணியமே 

பண்டம் பொய் கூரை பழகி விழுந்தக்கால் 
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது 
மண்டி அவருடன் வழிநட வாதே 


நாம் உயிருடன் இருக்கும்போது கூட இருந்தவர்கள் யாரும் கூட வரார்.
ஆனால் நாம் வாழும்போது செய்த நல்லறம், ஒழுக்கம் புணியங்கள் யாவுமே உயிருடன் துணையாய் வரும். 

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச் 
சூரைஅம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு 
நீரினில் மூழ்கி நினைப்பு அழிந்தார்களே.


எல்லோரும் ஒன்று கூடி அழுதுபுலம்பி உடம்பின் உண்மைப் பெயரை நீக்கி பிணம் என்று பெயர் சொல்லி சுடு காட்டில் எரித்துவிட்டு நீரில் முழுகிவிட்டு நினைவையும் மறந்து விடுவார்களே. என்ன வாழ்க்கை! 
 

                                               குருவே சரணம் சரணம்

No comments:

Post a Comment