Saturday, May 30, 2015

கொலையும் , குடிப்பழக்கமும் :


கொல்லாமையும் கள்ளுண்ணாமையும் அறிவுறுத்தல்:-

 


பல நாடுகளைக் காணும் ஆசையால் குணமாலையைப் பிரிந்த சீவகன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். சுதஞ்சணன் அளித்த மந்திரங்கள் மூன்றையும் உறுதுணையாகக் கொண்டு பயணம் மேற்கொண்டான். கானகம் வழியாகச் செல்லும்போது வேடன் ஒருவனை எதிர்கொள்கிறான்.

வேடனே, ‘நீ எங்கே வசிக்கிறாய்? உன் உணவு யாது?’ எனச் சீவகன் வினவ, வேடன் அருவிகள் பாயும் மலையில் வசிப்பதாகக் கூறி, பன்றி இறைச்சியும் கள்ளும்தான் தன் உணவு என விடையளிக்கிறான். முற்பிறப்பில் ஊனையும் கள்ளையும் உண்டு, உயிரைக் கொன்றதால்தான் இப்பிறப்பில் வேடனாய்ப் பிறக்க நேர்ந்தது. அதனால் அவற்றை உண்ணாது இருங்கள் எனக் கூறுகிறான் சீவகன். வேடனோ கள்ளையும் ஊனையும் தவிர்த்து எப்படி உயிர் வாழ்வது என வினவுகின்றான். ஊனைத் தின்று, ஊனாகிய உடம்பை வளர்ப்பது பாவம். அதனால் இங்கே காயும் கிழங்கும் பழமும் நல்ல நீரும் கிடைக்கின்றன. அவற்றை உண்டு வாழ்ந்தால் இன்பத்தைத் தரும் சொர்க்க வாழ்வை வாழலாம். அவ்வாறு வாழ முயலுமாறு அறிவுரை கூறுகிறான் சீவகன் (பதுமையார் இலம்பகம்: 1234,1236).
யாராக இருந்தாலும் கொல்லாமையாகிய அடிப்படை அறத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற கோட்பாடு மேலோங்கியுள்ளது. கள் உண்ணாமையும் வலியுறுத்தப்படுகிறது.   
இன்றைய நிலையிலும் மதுப்பழக்கம் பலரிடம் இடம்பெற்றிருந்தாலும் சமூகத்தால் மறுக்கப்படும் பழக்கமாகவே உள்ளது.
               குருவே சரணம் சரணம்

No comments:

Post a Comment