தூணின் பிடியில் கலியுகம் !!!!
கேதாரேஷ்வர்
மகாராஷ்டிராவின்
மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட்
கோட்டையிலுள்ள கேதாரேஷ்வர் குகையில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது. முழுவதுமாக நீரால் சூழப்பட்ட 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது அதோடு மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால்
மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம்
.
மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக
சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம்
முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக
இடிந்து விழும். அதன்படி தற்போது 3
தூண்கள் இடிந்துவிட்ட நிலையில்
கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று
நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த
உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு
நம்பிக்கை நிலவுகிறது.
No comments:
Post a Comment