வரந்தரு
காதையில் இளங்கோவடிகளின் அறவுரை:-
|
‘தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்’
என்றழைத்து, இளங்கோ அடிகள் கூறுகின்ற அறங்கள்
சமணச் சார்புடையன; ஆயினும் பொதுவான அறங்களாக அவை விளங்குவதை
மறுக்க இயலாது.
தெரிவுறக் கேட்ட திருத்தரு நல்லீர்!
|
|
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
|
|
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
|
|
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
|
|
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
|
|
தானம் செய்ம்மின்; நலம்பல தாங்குமின்;
|
|
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பிகழ்மின்;
|
|
பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்;
|
|
அறவோர் அவைக்களம் அகலா தணுகுமின்;
|
|
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
|
|
பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்;
|
|
அறமனை காமின்; அல்லவை கடிமின்;
|
|
கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
|
|
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
|
|
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
|
|
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
|
|
செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்;
|
|
மல்லன்மா ஞாலத்து வாழ்வீர்
|
|
(வரந்தருகாதை 185-202)
|
இதன் பொருளாவது:
பிறர்க்குக் கவலையும் துன்பமும் விளைத்தலைத்
தவிர்த்திடுக. தெய்வத்தை உணருக. தெய்வத்தை உணர்ந்தோரை விரும்புக. பொய்யுரை
தவிர்க்க. புறங்கூறுதலை நீக்குக. ஊன் உண்ணுதலை நீங்குமின். உயிர்க்கொலை செய்தலைத் தவிர்க்க.
தானம் செய்க. தவத்தை மேற்கொள்க. பிறர் செய்த உதவியை மறக்க வேண்டா. தீயோரது
தொடர்பினை ஒதுக்குக. பொய்ச்சாட்சி கூறும் நெறியில் செல்ல வேண்டாம். உண்மை மொழியை
நீங்க வேண்டாம். அறநெறிச் செல்லும் சான்றோர் அவையினை நீங்கா வேண்டாம்; மறநெறி செல்வோர் அவையினின்றும்
நீங்குக. பிறர் மனைவியை விரும்பாதீர். துன்பமுற்ற உயிர்களைப் பாதுகாப்பீராக.
இல்லறத்தைப் போற்றுங்கள். பாவச் செயல்களை (கள், காமம்,
களவு, பொய்) விலக்குங்கள். பயனில சொல்லை
ஒழியுங்கள். ஏனென்றால் இளமை, செல்வம், யாக்கை
இவை நிலையற்றன. அடையவிருக்கும் துன்பம் அடைந்தே தீரும். அதனால் மறுமைக்குத் துணை
நிற்கும் அறத்தினைத் தேடுங்கள்.
No comments:
Post a Comment