குருவே சரணம்
குரு பாதமே சரணம்
குருதிரு பாதமே சரணம் சரணம்
எனது குரு (அய்யா
) இந்த எல்லையற்ற மடங்கு நமக்கு அருகில் இருக்கிறார். அதேவேளையில் அதைவிடப் பல
மடங்கு உயர்ந்த நிலையில் அவர் இருக்கிறார். அவர் அறியக் கூடியவரும்
அல்ல; அறியப்பட முடியாதவரும் அல்ல. இந்த இரண்டு நிலைகளையும்விட எல்லையற்ற மடங்கு
உயர்ந்த நிலையில் அவர் இருக்கிறார். அவரே நமது ஆன்மா. அந்தப்
பரம்பொருள் நிறைந்திருக்காவிட்டால்,
இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு
கணம்கூடயாரால் வாழ முடியும்? யாரால் மூச்சுவிட முடியும்?
ஏனென்றால் அவருள்ளும்
அவர் மூலமாகவும் தான் நாம் மூச்சுவிடுகிறோம். அவருள்ளும் அவர்
மூலமாகவும்தான் வாழ்கிறோம். அவர் எங்கேயோ
நின்றுகொண்டு என் உடலில் ரத்தத்தை ஓடச் செய்கிறார் என்பது பொருளல்ல. எல்லாவற்றின் சாரமாகவும் ஆன்மாவின்
ஆன்மாவாகவும் அவர்
இருக்கிறார் என்பதே
பொருள்
.
குருவடி பணிந்தால் இறைவன் திருமுடி நம்மை நோக்கி வந்து
விடும்! பணிந்தவர்க்கே பரமனருள்! பணிவு – கனிவு
– அன்பு – பண்புதான் இறையருள் கூட்டுவிக்கும்! அத்தகைய
திருவடி எப்படி
பட்டது என பல நூறு வார்த்தைகளால் வர்ணிக்கிறார் வள்ளல் பெருமான்!தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம்
தரும்இணை மலர்ப் பூம்பதம்
சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய
சாட்சியாகிய பூம்பதம்
தணிவிலா அணுபக்ஷ சம்பு பக்ஷங்களில்
சமரசமுறும் பூம்பதம்
தருபரம் சூக்குமம் தூலம் இவைநிலவிய
தமக்குள் உயிராம் பூம்பதம்!
இந்த ஒரு தவம் போதும் எல்லாருக்கும் வழி காட்டும் என சொல்லும் வள்ளல் பெருமானின் அற்புதமான பாடல்!
என் அறிவெனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய்
இருந்த செங்கமலப் பதம்
என் அன்பெனும் பதம் என் அன்பிற்க்கு வித்தாய்
இசைந்த கோகனகப் பதம்
என் தவமெனும் பதம் என் மெய்த்தவப் பயனாய்
இயைந்த செஞ் சலசப்பதம்
என் இரு கண்மணியானபதம் என் கண்மணிகளுக்கு
இனிய நல்விருந்தாம் பதம்
என் அறிவெனும் பதம்
நமக்கு அறிவு, தூய அறிவு துலங்குவது திருவடியிலிருந்த்துதான்!
ஆகவே என் குருவடி பற்றிய எனக்கு எந்த சூழ்நிலயிலும் என் சிந்தனை மாறாமல் எப்போதும் அவர் கூறும் வழியில் பிறழாமல் கடவுளின் பொற்பாத பாதங்களில் ஓன்று சேர்ந்திட குருவின் பொற்பாதத்தை பற்றிட வேண்டுகிறேன் .
குருவே சரணம் சரணம் .
No comments:
Post a Comment