மும்மணிக்
கோட்பாடு:-
|
சித்திர கூடம் என்னும் இடத்தில் வாழும் தாபதர் என்ற துறவியருக்குச்
சீவகன் அருகப் பெருமானின் மறைமொழிகளைப் பின்பற்றுமாறு அறவுரை கூறுகிறான். அந்த
அறவுரையில் சமணக் கோட்பாடாகிய மும்மணிக் கோட்பாடு விளக்கம் பெறுகிறது.
மெய்வகை தெரிதல் ஞானம்
|
|
விளங்கிய பொருள்கள்
தம்மைப்
|
|
பொய்வகை இன்றித் தேறல்
|
|
காட்சிஐம் பொறியும்
வாட்டி
|
|
உய்வகை உயிரைத் தேயாது
|
|
ஒழுகுதல் ஒழுக்கம் மூன்றும்
|
|
இவ்வகை நிறைந்த போழ்தே
|
|
இருவினை கழியு மென்றான்
|
|
(சீவக.சிந்:1436)
|
ஞானமாவது உண்மையை அறிதல், காட்சியாவது
அவ்வாறு அறிந்த பொருள்களைப் பொய்யின்றாகத் தெளிதல். ஒழுக்கமாவது ஐம்பொறிகளையும்
ஐம்புலன்களில் செல்லாமல் கெடுத்து, உயிரைக் கெடாமல்
அவ்வுயிர் உய்யும் வகையில் நடத்தல். மேற்கூறிய மூன்றும் நிறைந்தபோது இருவினையும்
கெடும் என்றான்.
நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம்
என்று சொல்லப்படுவது மும்மணிகள் எனச் சமணசமயத்தில் வழங்கப்படும். அதை இரத்தினத்திரயம்
என்றும் கூறுவர்.
இதே கருத்துப் பின்னர் சீவகன் துறவு வேண்டிச் சாரணரை அணுகிய
போது, சாரணர் கூறிய அறிவுரையிலும் விளக்கப்பட்டுள்ளது.
பொருள்களுள் மெய்ப்பொருள் எது எனத் தெளிதல் ஞானம் ஆகும். தெளிந்த அம்மெய்ப்
பொருளின் தன்மையை உணர்ந்தறிதல் காட்சி ஆகும். ஞானமும் காட்சியும் நீக்கமறத் தன்னுளே
நிறைந்து விளங்க நடந்தொழுகுதல் ஒழுக்கம் ஆகும். இதை விளக்கும் பாடல்
உள்பொருள் இதுஎன உணர்தல் ஞானமாம்
|
|
தெள்ளிதின்அப்பொருள் தெளிதல் காட்சியாம்
|
|
விள்அற இருமையும் விளங்கத் தன்னுளே
|
|
ஒள்ளிதின் தரித்தலை ஒழுக்கம் என்பவே
|
|
(முக்தி இலம்பகம்
: 2845)
|
குருவே சரணம் சரணம்
No comments:
Post a Comment